
டிஜிட்டல் இந்தியா கனவோடு பயணிக்கும் மக்கள் தற்போது நாளுக்கு நாள் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.
அதாவது கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார் . அதனை தொடர்ந்து,பேடிஎம் , மொபிவிக் உள்ளிட்ட செயலிகள் பண பரிவர்த்தனை செய்வதற்கு அதிகம் பயன்படுத்தப் பட்டு வருகிறது . இந்நிலையில், வாட்ஸ் ஆப் செயலியானது இந்தய மக்களால் பெரிதும் பயன்படுத்தப் பட்டு வருகிறது அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு நாளும் புது புது கூடுதல் சிறப்பம்சங்களை வாட்ஸ் ஆப்பில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது .
வாட்ஸ்ஆப் பொறுத்தவரை எளிதில் பயன்படுத்தும் விதத்திலும் , தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவதால், இந்த செயலியை பயன்படுத்தி , பண பரிவர்த்தனை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது .
அதன் படி, மத்திய அரசின் UPI வழிமுறையினை, வாட்ஸ்அப்பில் டிஜிட்டல் பரிவர்த்தனை வழங்குவது குறித்து, வாட்ஸ்அப் நிறுவனம் மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது .
இந்தியாவை பொறுத்தவரை வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2௦௦ மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது .
ஒரு வேளை வாட்ஸ் ஆப், டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிமுகம் செய்தால் மற்ற நிறுவனங்கள் பெரிய அளவில் இழப்பை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.