வாட்ஸ் ஆப் அதிரடி....! இந்தியாவில் மட்டும் டிஜிட்டல் பரிவர்த்தனை..!

First Published Apr 5, 2017, 9:56 AM IST
Highlights
whats app going to start digital transaction in india


டிஜிட்டல்  இந்தியா  கனவோடு  பயணிக்கும்   மக்கள் தற்போது நாளுக்கு நாள்  டிஜிட்டல்  பரிவர்த்தனையை  மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

அதாவது  கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக    ரூபாய் நோட்டு  செல்லாது  என  பிரதமர் மோடி அறிவித்தார் . அதனை தொடர்ந்து,பேடிஎம் , மொபிவிக் உள்ளிட்ட  செயலிகள்  பண  பரிவர்த்தனை  செய்வதற்கு அதிகம்  பயன்படுத்தப் பட்டு வருகிறது . இந்நிலையில்,  வாட்ஸ் ஆப் செயலியானது  இந்தய மக்களால்  பெரிதும் பயன்படுத்தப் பட்டு வருகிறது அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு நாளும்  புது புது கூடுதல் சிறப்பம்சங்களை வாட்ஸ் ஆப்பில்  அறிமுகம்  செய்யப்பட்டு வருகிறது .

 வாட்ஸ்ஆப்  பொறுத்தவரை  எளிதில் பயன்படுத்தும்   விதத்திலும் , தொழில்நுட்பத்தில்  சிறந்து விளங்குவதால்,  இந்த  செயலியை  பயன்படுத்தி , பண பரிவர்த்தனை  செய்வதற்கு  முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது .

அதன் படி, மத்திய அரசின் UPI வழிமுறையினை, வாட்ஸ்அப்பில் டிஜிட்டல்  பரிவர்த்தனை வழங்குவது குறித்து, வாட்ஸ்அப்   நிறுவனம் மத்திய அரசு அதிகாரிகளுடன்  பேச்சுவார்த்தை  நடத்தி உள்ளது .

இந்தியாவை  பொறுத்தவரை  வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களின்  எண்ணிக்கை 2௦௦  மில்லியன்  என்பது குறிப்பிடத்தக்கது .

ஒரு வேளை வாட்ஸ் ஆப்,  டிஜிட்டல்  பரிவர்த்தனை செய்யும் வசதியை  அறிமுகம் செய்தால்  மற்ற  நிறுவனங்கள்  பெரிய  அளவில்  இழப்பை சந்திக்கும்   என்பது   குறிப்பிடத்தக்கது .

 

click me!