கவுண்ட் டவுனை துவங்கிய ISRO.. புத்தாண்டில் விண்ணில் பாயும் PSLV C58 - இந்த முறை எந்த மிஷனுக்காக தெரியுமா?

By Ansgar RFirst Published Dec 31, 2023, 12:08 PM IST
Highlights

PSLV C58 Count Down : மனித ஆராய்ச்சியில் புதிய மையில்களாக black holes மற்றும் neutron stars உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய ஒரு புதிய முயற்சியை செயல்படுத்தவுள்ளது இஸ்ரோ. இதற்கான பணி நாளை புத்தாண்டு நாளில் துவங்குகிறது.

பிஎஸ்எல்வி எக்ஸ்போசாட் மற்றும் 10 பேலோடுகளை விண்ணில் செலுத்தும் நிகழ்விற்கான Count Downஐ தற்போது இஸ்ரோ துவங்கியுள்ளது. இன்று 2023ம் ஆண்டில் இறுதி நாளான டிசம்பர் 31ம் தேதி காலை சுமார் 8.10 மணியளவில் கவுண்ட் டவுன் துவங்கப்பட்டுள்ளது. 

இந்த 25 மணி நேர Count Down முடிந்தது, இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நாளை புத்தாண்டு ஜனவரி 1 2024 காலை 9.10 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் (SDSC) முதல் ஏவுதளத்தில் இருந்து, 44-மீ உயரமுள்ள அந்த ராக்கெட் இந்தியாவின் XPoSat (X-ray Polarimeter Satellite)-ஐ சுமந்து கொண்டு, வானியலின் பல்வேறு இயக்கவியல்களை ஆய்வு செய்வதற்காக நாளை புறப்படுகிறது. "நடுத்தர எக்ஸ்-ரே வரம்பில் துருவமுனைப்பு அளவீடுகளுக்கான முதல் அர்ப்பணிப்பு செயற்கைக்கோள் தான் இந்த XPoSat. மேலும் இது கருந்துளைகள் மற்றும் பிற நட்சத்திரங்களை பற்றி மிகவும் சுவாரஸ்யமான விஷயங்களை கண்டறியப் போகிறது.

"கருந்துளைகள், நியூட்ரான் நட்சத்திரங்கள் மற்றும் பிற ஆற்றல்மிக்க நிகழ்வுகள் போன்ற வானப் பொருட்களில் இருந்து உமிழ்வுகள் சிக்கலான நிகழ்வுகளிலிருந்து எழுகின்றன மற்றும் புரிந்துகொள்வதற்கு ஒரு வலிமையான சவாலை வழங்குகின்றன. இந்த சவாலை சமாளிக்க, இந்தியாவின் இந்த முதல் துருவமுனைப்பு மற்றும் நிறமாலை செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது. இந்த பணி ஐந்தாண்டுகள் வரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது" என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

வானியல் நிகழ்வுகளை மேலும் ஆழமாக புரிந்துகொள்ள ஏதுவாக எக்ஸ்போசாட் எனும் அதிநவீன செயற்கை கோள், நாளை காலை 9.10 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது pic.twitter.com/gxnP5OYfr7

— DD Podhigai News (@DDNewsChennai)

22 நிமிட பயணத்தின் முடிவில், 469 கிலோ எடையுள்ள விண்கலம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 650 கிமீ உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். பின் செயற்கைக்கோளை உத்தேசித்த சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பிறகு, பிஎஸ்எல்வி ராக்கெட்டின் (பிஎஸ் 4) இறுதிக் கட்டமானது 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குறைந்த சுற்றுப்பாதையில் இரண்டு நிகழ்வுகளில் இயந்திரங்களை மீண்டும் இயக்குவதன் மூலம் கீழே கொண்டு வரப்படும். 

எதிர்கட்சித் தலைவர்கள் ஐபோன்களை ஹேக் செய்கிறதா மோடி அரசு? அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதில்

350 கிமீ சுற்றுப்பாதையில் ஒருமுறை, மேல் நிலை தொட்டிகளுக்குள் சேமிக்கப்படும் எரிபொருட்கள் மற்றும் அபாயகரமான இரசாயனங்கள் செயலிழக்கப்படும். செயலிழக்கச் செய்வது என்பது சாத்தியமான வெடிப்புகள் அல்லது சேமிக்கப்பட்ட இரசாயனங்கள் உடைவதைத் தடுக்கும் ஒரு படியாகும். இது விண்வெளியின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு முறையாகும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!