
சாம்சங் நிறுவனம் புதியதாக அறிமுகம் செய்ய உள்ள கேலக்ஸி எஸ்10 ப்ளஸ் ரக ஸ்மார்ட்ஃபோன் 5 கேமிரா பொருத்தப்பட்டதாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம், சர்வதேச சந்தையில் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக பல ஸ்மார்ட்ஃபோன்களை சாம்சங் வெளியிட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனங்கள் சாம்சங் நிறுவனத்திற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.
இந்நிலையில், கேலக்ஸி எஸ் 10 ப்ளஸ் என்ற புதிய ஸ்மார்ட்ஃபோனை விரைவில் சாம்சங் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பில் புது முயற்சியாக, 5 கேமிராக்கள் பொருத்தப்பட்டதாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வகை ஸ்மார்ட்ஃபோனில் மொத்தம் 3 ரகம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.