
சென்னை தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து சவரன் 25 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்னும் விலை உயர வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தங்கம் விலை கடந்த மே மாதத்தில் ஏற்றம், இறக்கம் நிலை காணப்பட்டது. ஆனால், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நிலை மாறி தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 3-ம் தேதி ஒரு சவரன் 24,608-க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 4-ம் தேதி ஒரு சவரன் 24,776-க்கும், 5-ம் தேதி 24,928-க்கும், 6-ம் தேதி 24,976-க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு சவரன் 24,984-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு 19 உயர்ந்து ஒரு கிராம் 3,142-க்கும், சவரனுக்கு 152 உயர்ந்து ஒரு சவரன் 25,136-க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை சவரன் 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் தொடர்ந்து 6 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு 528 அளவுக்கு உயர்ந்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால் நேற்றைய விலையிலேயே தங்கம் விற்பனையாகும். திங்கட்கிழமை மார்க்கெட் தொடங்கியதும் தங்கம் விலையில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.