போதையில் செல்போனில் பேசியதால் விபரீதம்... பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி...!

Published : Dec 26, 2018, 05:23 PM ISTUpdated : Dec 26, 2018, 05:24 PM IST
போதையில் செல்போனில் பேசியதால் விபரீதம்... பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி...!

சுருக்கம்

சேலம் மாவட்டம், ஏற்காடு, எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பிலிப்குமார். இவரது மகன் கண்ணன் (27). ஏற்காட்டில் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

சேலம் மாவட்டம், ஏற்காடு, எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பிலிப்குமார். இவரது மகன் கண்ணன் (27). ஏற்காட்டில் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

நேற்று மாலை கண்ணன், ஏற்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினார். பின்னர், ஏற்காடு பஸ் நிலையம் பின்புறம் சென்ற அவர், செல்போன் மூலம் தனது அக்காவிடம் பேசினார். அப்போது, போதை அதிகளவில் இருந்ததால், நிலைதடுமாறி அவர், அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

இதை பார்த்ததும், அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதைனை செய்த டாக்டர், கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சேலத்தில் பரபரப்பு! திமுக பிரமுகர் சுட்டுக்கொ*லையால் அதிர்ச்சி!
35 வயதில் பலான வேலையை செய்து விட்டு 60 வயதில் சிக்கிய நல்லதம்பி! 25 வருஷத்துக்கு பின் பிடிப்பட்டது எப்படி?