தங்களது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்;

Asianet News Tamil  
Published : Nov 30, 2017, 07:39 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
தங்களது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்;

சுருக்கம்

Village administration officials protest against the Vatatsar Office

வேலூர்

கூடுதல் தொகுப்பூதியம் அரசு ஆணையை அமல்படுத்தக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் கிளை தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "இணையதள சான்றிதழ் செலவினம்  மற்றும்  கூடுதல் தொகுப்பூதியம் போன்றவற்றுக்கு அரசு ஆணை இருந்தும், அதனை செயல்படுத்தாமல் இருக்கும் வருவாய்த் துறை மேல்நிலை அலுவலர்களைக் கண்டித்தும்,

உடனடியாக அரசாணையை அமல்படுத்த வேண்டும்" என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. மேலும், ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன.  

இந்த ஆர்ப்பாட்டத்தில்  கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜேஷ், கதிரவன், பழனி, சாபுதீன், கமலகண்ணன், மஞ்சுளா உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

PREV
click me!

Recommended Stories

மறைந்தும் வாழும் கருப்பு எம்.ஜி.ஆர்.. 'கேப்டன்' விஜயகாந்த் நினைவிடத்தில் குவியும் அரசியல் தலைவர்கள்!
சென்னை டூ ராமேஸ்வரம் புதிய ரயில் வந்தாச்சு.. பயணிகளுக்கு குட் நியூஸ்! முழு விவரம் இதோ!