சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. சந்திப்பைத் தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.