
மதுரையின் வாழ்வாதாரமான வைகை நதியைப் பாதுகாக்கும் வகையில், 'வீ தி லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பு சார்பில் பிரம்மாண்ட வைகை நதி தூய்மைப் பணி இயக்கம் நடைபெற்றது. இந்தத் தூய்மைப் பணியில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவன தலைவர் அண்ணாமலை அவர்கள் நேரடியாகக் கலந்துகொண்டு, வைகைக் கரையில் குவிந்திருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியை முன்னின்று நடத்தினார். வைகை நதியைத் தூய்மையாகவும் எழிலோடும் பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான தன்னார்வலர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.