நாசமான நெல் நடந்தது என்ன.? பொய் சொல்கிறார் அந்த பெண் உதயநிதி ஆவேசம்

Published : Oct 25, 2025, 09:32 AM IST
Udhayanidhi vs EPS

சுருக்கம்

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் தாமதத்தால் மழையில் நெல்மணிகள் முளைப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், விவசாயி பூங்கொடி நெல் அறுவடையே செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். 

Tamil Nadu paddy procurement issue : தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கரூர் ஆகியவற்றில் சம்பா சாகுபடி முக்கியமான நெல் பயிர் பருவமாகும். இது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகக் கருதப்படும் டெல்டா பகுதியில் பெரும்பாலான விவசாயிகளின் முதன்மை வருமான மூலமாக உள்ளது. இந்தநிலையில் இந்தாண்டு பல இடங்களில் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைமூட்டையாக நெல் குவிந்து வருகிறது. இதனால் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டையை கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகுவதாக குற்றம்சாட்டப்பட்டது.

நெல் கொள்முதல் இபிஎஸ் நேரில் ஆய்வு

இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 22ஆம் தேதி தஞ்சாவூரில் பல இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டார். அப்போது விவசாயிகள் தாங்கள் பாதிக்கப்பட்டதை எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துரைத்தனர். அப்போது காட்​டூர் நெல் கொள்​முதல் நிலை​யத்​தில் அவர் ஆய்வு செய்​த​போது, வரவுக்​கோட்​டையைச் சேர்ந்த பூங்​கொடி என்ற பெண் விவசாயி, மழையில் முளைத்த நெல்களை காண்பித்து கண்ணீர் விட்டார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் சென்று விவசாயிகள் படும் துயரத்தையும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே நெல்மணிகள் குவியலாக குவிக்கப்பட்டு முளைவிட்டு இருந்ததையும், இந்த தீபாவளி, விவசாயிகளின் கண்ணீர் தீபாவளியாக மாறியதையும் கட்டிக் காட்டி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைந்து நிவாரணம் வழங்க இந்த அரme வலியுறுத்தினேன்.

கதறும் விவசாயி- உதயநிதி விளக்கம்

நெல் சிறிதளவு முளைத்தால் என்ன ? நாத்து நடும் அளவுக்கு முளைத்தால் என்ன? நெல் முளைத்துவிட்டாலே அது வீண் தானே என விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் தஞ்​சாவூர் ரயில் நிலை​யத்​தில் நெல் மூட்​டைகளை வேகன்​களில் அனுப்​பும் பணி​யை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேரில் பார்வையிட்டார். அப்போது நெல் கொள்முதல் தொடர்பாக எடப்பாடி பழனி​சாமி பொய்​யான தகவல்​களை தெரிவிப்பதாகவும், அவரிடம் நெல்​மணி​கள் முளைத்​துள்ளதை காட்​டிய பெண் பூங்​கொடி குத்​தகை சாகுபடி செய்து வருபவர் என்​றும், அவர் இன்​னும் அறு​வடை பணி​யையே மேற்​கொள்​ளாத​போது, அவர் எப்​படி நெல் மூட்டைகளை கொள்​முதல் நிலை​யத்​துக்கு கொண்டு வந்​தார் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

பெண் விவசாயி கூறுவது என்ன.?

இது தொடர்பாக அந்த பெண் விவசாயி பூங்​கொடி கூறுகையில், நான், நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்த நெல் முளைச்சிட்டுன்னு சொன்னதா சொல்றாங்க. நான் அப்படிச் சொல்லல. தீபாவளிக்கு 10 நாள் முன்னாடியே எங்க நெல் அறுவடைக்கு வந்திருச்சி. சென்டர்ல நெல் கொள்முதல் செய்யாததால நான் அறுவடை செய்யல. எடப்பாடி பழனிசாமி அய்யா வந்தபோது, வயலிலேயே முளைச்ச நெற்பயிரை எடுத்து வந்து, 'கொள்முதல் தாமதமானதால நான் அறுவடை செய்யாமல் இருந்தேன். இப்போ மழையில நெற்பயிர் முளைச்சி பாதிச்சிருக்கு'னு என் நிலைமையைச் சொன்னேன் என தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!