"உள்மாவட்டங்களில் மழை பெய்யும்” - வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி...

 
Published : May 19, 2017, 03:49 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
"உள்மாவட்டங்களில் மழை பெய்யும்” - வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி...

சுருக்கம்

there will be rain in inner districts

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆந்திரத்தில் இருந்து தமிழகத்திற்கு வெப்பம் வீசுகிறது. ஆந்திராவில் தொடர்ந்து வெப்பநிலை இயல்பை விட அதிக நிலையில் உள்ளது.

கடலோர மாவட்டங்களில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உள்மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்.

அதிக பட்சமாக தக்கலை, தாளவாடியில் 6 செ.மீ மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மே 1 முதல் 19 வரை இயல்பையொட்டி கோடை மழை பெய்துள்ளது. கடலோரம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!