ஓரின சேர்க்கைக்கு வர மறுத்த 12 வயது சிறுவனை அடித்து கொன்ற நண்பர்கள்...!

First Published May 28, 2018, 7:32 PM IST
Highlights
the boy not support homo sex beat and murder his friends


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஓரினச் சேர்க்கைக்கு ஒத்துழைக்க மறுத்த 12 வயது சிறுவனை சக சிறுவர்கள் அடித்துக் கொன்று குளத்தில் வீசியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கே.பெருமாள்பட்டியைச் சேர்ந்த 12 வயது சிறுவனை அவனது நண்பர்கள் 3 பேர் ஊருக்கு அருகிலுள்ள கண்மாய்க்குக் குளிக்கச் செல்லலாம் என அழைத்துச் சென்றுள்ளனர். 

அவர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர்கள் அனைத்து உறவினர்கள் வீட்டிலும் தேடி அலைந்து, பின் கண்மாய் தண்ணீரில் சிறுவனுடைய உடலில் காயங்களுடன் கிடப்பதாக அறிந்து அலறி அடித்துக்கொண்டு சென்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து உத்தமபாளையம் காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், கவின்குமாருடன் சென்ற சக சிறுவர்களே அவனை அடித்துக் கொன்றது தெரியவந்தது. 

இதனையடுத்து மூன்று சிறுவர்களையும் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே உயிரிழந்த சிறுவன் ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அதற்கு ஒத்துழைக்காததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.  சிறுவனை கொலை செய்ததாகக் கூறப்படும் மூன்று பேருமே 14ல் இருந்து 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!