தகைசால் தமிழர் விருது இந்தாண்டு யாருக்கு..? விருது பெறுபவரின் பெயரை அறிவித்த தமிழக அரசு

Published : Aug 01, 2023, 12:19 PM IST
தகைசால் தமிழர் விருது இந்தாண்டு யாருக்கு..? விருது பெறுபவரின் பெயரை அறிவித்த தமிழக அரசு

சுருக்கம்

தகைசால் தமிழர் விருதிற்கு திராவிடர் கழகத் தலைவர் முனைவர். கி. வீரமணி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதை வழங்கவுள்ளார். 

"தகைசால் தமிழர்"  விருது

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருது 2021 ஆம் ஆண்டு முதல் தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரையாவிற்கு வழங்கப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான விருது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,

 இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, 'சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு' ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவரும், 

கி.வீரமணிக்கு "தகைசால் தமிழர்"  விருது

1962-இல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருபவரும், உண்மை, பெரியார் பிஞ்சு. The Modern Rationalist - (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணைய தளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துக்களைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும்.

திராவிடர் கழகத் தலைவருமான முனைவர் கி. வீரமணி அவர்களுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. "தகைசால் தமிழர்"விருதிற்குத்தேர்ந்தெடுக்கப்பட்டமுனைவர். கி. வீரமணி அவர்களுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற 2023 ஆகஸ்ட் திங்கள் 15-ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

முஸ்லிம்களும்,கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகளா.? சீமான் மன்னிப்பு கேட்கனும்- சீறும் ஜவஹிருல்லா

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏற்காட்டில் நடந்த ஏடாகுடம்! ஒன்ஸ்மோர் கேட்ட பார்த்திபன்! காசு இருந்தா மட்டும் தான் சொன்ன சாலா! இறுதியில் அதிர்ச்சி
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்.. இனி 12 மாதமும் சம்பளம், ரூ.2500 ஊதிய உயர்வு.. அமைச்சர் மகேஸ் அறிவிப்பு