பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பதவியேற்ற ஆறு வாரங்களில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் கொடுத்த வாக்குறுதியின்படி, பொருளாதார திட்டங்களை கொண்டு வராததால், தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். இவரது ராஜினாமாவை அடுத்து இந்திய வம்சா வழியான ரிஷி சுனக் பிரதமர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருபபதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
05:55 PM (IST) Oct 20
திருமணத்தின் போது மண்டபத்தை விட்டு வெளியேறி எனக்கு பிடித்த பாரதியை திருமணம் செய்து கொள்வேன் என புதிய திட்டம் ஒன்றை தீட்டி விடுகிறார்.
bharathi kannamma : பாரதி கூறிய உண்மையால் விபரீத முடிவெடுக்கும் ஹேமா..புது திட்டம் போடும் வெண்பா
05:53 PM (IST) Oct 20
அடுத்ததாக சந்தியாவுக்கு மல்டி டாஸ்க் போட்டி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட, அந்த நேரத்தில் சந்தியா மயங்கி விழுகிறார்.
முடியால் சிக்கிய சந்தியா..ஒருபுறம் மாமியார்..ஒருபுறம் அதிகாரி...ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்
05:50 PM (IST) Oct 20
செழியன் உணவு வாங்கி வருவதை பார்த்த எழில் பாக்யாவிடம் இதைக் கூறுகிறார். இதனால் ஜெனி பாக்யாவிடம் மாட்டிக் கொள்கிறார்.
baakiyalakshmi : ஒருவழியாக முடிவுக்கு வந்த பாக்கியலட்சுமி மகா சங்கமம்..இன்றைய எபிசோட்
01:24 PM (IST) Oct 20
முழுமையாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.30,000 இழப்பீடாக வழங்கப் பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு விவசாயிக்கும் அவர்களின் சர்வே எண் அடிப்படையில் ரூ.35, ரூ.50, ரூ.66, ரூ.88 என்ற அளவில் தான் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
11:42 AM (IST) Oct 20
ஜெயிலர் பட குழு தற்போது கலை இயக்குனரையும் முடிவு செய்துள்ளது. பிரபல கலை இயக்குனரான கிரன் தான் இந்த படத்திற்காக பணிபுரிய உள்ளார்.
முக்கிய அங்கத்தை முடிவு செய்த ஜெயிலர் படக்குழு...என்ன விஷயம் தெரியுமா?
11:03 AM (IST) Oct 20
சாலைகளில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் மற்றும் இதர அவரசகால வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
10:53 AM (IST) Oct 20
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் ரயில்களில் டிக்கெட் விரைவாக விற்றுத் தீர்ந்தது. தற்போது பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செல்லவும் ஏராளமானோர் முண்டியடித்துக்கொண்டு முன்பதிவு செய்துள்ளனர்.
09:52 AM (IST) Oct 20
தலைமறைவாக உள்ள மீரா மிதுனை இன்னும் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரது மொபைலும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாக இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்த போலீஸ், அவரது உறவினர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் படிக்க
09:51 AM (IST) Oct 20
தற்போது இருப்பதைப்போல் அப்போது செல்போன், வீடியோ கேமராக்கள், சமூக வலைதளங்கள் இருந்திருந்தால் நாங்கள் செய்த தொண்டிற்கு நான் அப்போதே முதலமைச்சராகி இருப்பேன் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
09:31 AM (IST) Oct 20
பிளஸ்- 2 மாணவி பயன்படுத்தி வந்த செல்போனை பெற்றோர் பறித்ததால் விரக்தி அடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
09:07 AM (IST) Oct 20
எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு ஓபிஎஸ் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். முதலில் தங்கமணிக்கு எதிராக 3 மாவட்ட செயலாளர்களை நியமித்து அதிர்ச்சி கொடுத்த நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ, சிட்டிங் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியில் இணைந்து பேரதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.
07:42 AM (IST) Oct 20
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பயணிகள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
07:36 AM (IST) Oct 20
2012 முதல் 2016ம் ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.11 கோடி ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. வேலையே செய்யாத நிறுவனத்திற்கு பணப்பட்டுவாடா செய்தது சிஏஜி அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.
07:35 AM (IST) Oct 20
தற்போதைய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக அவர் மீது ஏராளமானோர் புகார் கொடுத்தனர்.