மின்இணைப்புடன் ஆதார் இணைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. முன்னதாக மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடை கோரிய வழக்கை அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை அடுத்து மேல்முறையீடு செய்யப்பட்டால் தமிழக அரசின் வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

11:00 PM (IST) Jan 01
டெலிகிராமில் தற்போது மறைக்கப்பட்ட மீடியாவை அனுப்புதல், படங்களுக்கு உரைகள் மற்றும் ஈமோஜிகளைச் சேர்த்தல் என பல்வேறு அம்ச அப்டேட்கள் வந்துள்ளன.
10:45 PM (IST) Jan 01
இந்துத்துவாவின் ரெய்டுக்கு பயந்து மம்தா பானர்ஜி, மாயாவதி, ஜெகன் மோகன் உள்ளிட்ட பல தலைவர்கள் எதிர்ப்பதில்லை. இந்திய துணை கண்டத்தில் இந்துதுவாவை எதிர்க்கும் சக்தி படைத்த ஒரே தலைவர் மு. க. ஸ்டாலின் தான். - ஆ. இராசா.
10:09 PM (IST) Jan 01
நீங்கள் எப்போதாவது மற்றவர்களை விட குளிர்ச்சியாக உணர்ந்து இருக்கிறீர்களா ? உங்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் இதே பிரச்சனை இருக்கிறது. அது இயல்பான ஒன்று தான். சிலருக்கு மற்றவர்களை விட எளிதில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் பல காரணிகள் உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
08:45 PM (IST) Jan 01
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லை என நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
07:50 PM (IST) Jan 01
திருப்பதி ஏழுமலையான் கோவில் 6 மாதத்திற்கு மூடப்பட உள்ளதாக இணையத்தில் செய்தி வெளியானது.
06:45 PM (IST) Jan 01
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
05:30 PM (IST) Jan 01
அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
03:37 PM (IST) Jan 01
கொரோனா பேரிடர் காலத்தில் தொகுப்பூதிய பணியாளர்களாகச் சேர்க்கப்பட்ட செவிலியர்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான்.
03:11 PM (IST) Jan 01
காற்றின் வேக மாறுபாடு காரணமாக 03ம் தேதி முதல் வருகிற 05ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது வானிலை மையம்.
12:22 PM (IST) Jan 01
போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் முகமது இம்ரான் தமிழ்நாட்டில் ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், உடனடியாக அவனை கைது செய்ய வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
10:25 AM (IST) Jan 01
புத்தாண்டு தினத்தன்று காவல் அதிகாரிகள் உயர் அதிகாரிகளை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்க தலைமை அலுவலகங்களுக்கு புறப்படும் வழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். வாழ்த்துக்களை தொலைபேசியில் தெரிவித்தால் போதுமானது என டிஜிபி சைலேந்திர பாபு திடீர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க..
10:25 AM (IST) Jan 01
ஆவின் பச்சை பால் பாக்கெட் விலை 2 ரூபாய் அதிகரித்து பால் பாக்கெட்டில் அச்சடிக்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் படிக்க..
10:19 AM (IST) Jan 01
சென்னையில் புத்தாண்டையொட்டி போலீசார் நடத்திய சோதனையில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 252 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.