பேசும் போதே கத்தியை கையில் எடுத்த ராமச்சந்திரன்… ஸ்வேதா பாவம்.. அலறிய மக்கள்…

By manimegalai aFirst Published Sep 23, 2021, 7:57 PM IST
Highlights

சென்னையில் பரபரப்பான தாம்பரம் அருகே காதலியை காதலனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் மக்களை அலற வைத்துள்ளது.

சென்னை: சென்னையில் பரபரப்பான தாம்பரம் அருகே காதலியை காதலனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் மக்களை அலற வைத்துள்ளது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவி ஸ்வேதா. குரோம்பேட்டை ராதா நகர் பகுதியை சேர்ந்த மதியழகனின் மகள். மதியழகன் மாநகர அரசு பேருந்து ஓட்டுநர்.

தாம் படித்து வரும் தாம்பரம் தனியார் கல்லூரி அருகே ஸ்வேதா நாகையை சேர்ந்த தமது காதலன் ராமச்சந்திரனுடன் பேசி கொண்டு இருந்தார். இருவரும் அங்கேயே நீண்ட நேரமாக பேசிக் கொண்டு இருந்திருக்கின்றனர்.

இருவரும் அங்கேயே ரொம்ப நேரமாக இருந்ததால் அப்பகுதி மக்கள் இவர்களை பார்த்துக் கொண்டே இருந்திருக்கின்றனர். என்ன நடந்தது என்று தெரியவில்லை… விநாடிக்கும் குறைவான நேரம் தான்… தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வேதாவின் கழுத்தில் சரமாரியாக குத்தி உள்ளார் ராமச்சந்திரன்.

அவ்வளவு தான்…. அலறிய ஸ்வேதா அடுத்த கணமே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அந்த இடமே பதறியது. அனைத்தையும் கண்ட மக்கள் சுதாரிப்பதற்குள் காதலன் ராமச்சந்திரன் அதே கத்தியால் தமது கழுத்தை சரக்கென்று அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் இறங்கினார்.

அரண்டு, தெறித்து ஓடிய மக்கள் சேலையூர் போலீசாருக்கும் இதை தெரிவித்தனர். விரைந்த வந்த போலீசார் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குத்து வாங்கிய ஸ்வேதா இறந்து போக, குத்திய ராமச்சந்திரன் பிழைத்திருக்கிறார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரபரப்பான சாலையில் மக்கள் முன்னிலையில் நிகழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!