விசை படகு மீது மோதிய சரக்கு கப்பல் - மீன் பிடித்து கொண்டிருந்த 3 மீனவர்கள் பலி!!

 
Published : Jun 11, 2017, 10:09 AM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
விசை படகு மீது மோதிய சரக்கு கப்பல் - மீன் பிடித்து கொண்டிருந்த 3 மீனவர்கள் பலி!!

சுருக்கம்

ship crashed on fishing boat

கொச்சி அருகே நடுக்கடலில் கப்பல் மோதிய விபத்தில், விசைப்படகு உடைந்து 3 மீனவர்கள் உயிரிழந்தனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது பயணிகள் கப்பல் மோதியதால் விபத்து ஏற்பட்டது.

குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் தம்பிதுரை. மீனவர். நேற்று இரவு தம்பிதுறை உள்பட 8 பேர், விசை படகு மூலம் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கேரள மாநிலம் கொச்சிக்கு தென்மேற்கே 55 நாட்டிக்கல் மைல் தொலைவில் படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அதிகாலை 3 மணியளவில் அந்த வழியாக வந்த சரக்கு கப்பல், மீன்பிடி படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படகில் இருந்த 8 மீனவர்கள் காயம் அடைந்தனர். மீன்பிடி படகில் நீர் புகுந்ததால் கடலில் மூழ்க தொடங்கியது.

அந்த நேரத்தில் அவ்வழியாக சென்ற மற்ற மீனவர்கள் சிலர், கடலில் தத்தளித்து கொண்டிருந்த 8 பேரை மீட்டனர். பின்னர், கொச்சி துறைமுகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு டாக்டர்கள், படுகாயமடைந்த மீனவர்களை பரிசோதைனை செய்தபோது, தம்பிதுரை உள்பட மீனவர்கள் 3 பேர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது.

இதுதொடர்பாக கொச்சி மாநில கடலோர காவல் படையினர், வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கப்பலை தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!