முதலில் முஸ்லீம்களுக்கு குறி! அடுத்தது கிறிஸ்தவர்கள்; ஆர்எஸ்எஸ்யின் திட்டம் இது தான்- செல்வப்பெருந்தகை!!

வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆர்எஸ்எஸ் அடுத்ததாக கிறிஸ்தவர்களை குறிவைப்பதாக செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். கத்தோலிக்க திருச்சபை நில உரிமையாளர் என ஆர்எஸ்எஸ் விமர்சித்துள்ளது.

Selvaperunthagai has accused the RSS of carrying out attacks targeting Christians KAK

 RSS targeting Christian community : நாடாளுமன்றத்தில் வக்ஃப் (திருத்த) மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டார். இந்த நிலையில் ஆர்எஸ்எஸ்யின் அடுத்த திட்டமாக கிறிஸ்தவர்களை குறிவைத்துள்ளதாக செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.  இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், வக்ஃப் (திருத்த) மசோதா முஸ்லிம்களை ஓரங்கட்டுவதையும் அவர்களின் தனிப்பட்ட சட்டங்கள் மற்றும் சொத்துரிமைகளைப் பறிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு ஆயுதம் என்பது உறுதியாகியுள்ளது. ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் அவர்களது கூட்டாளிகளால் அரசியலமைப்பின் மீதான இந்தத் தாக்குதல் இன்று முஸ்லிம்களை இலக்காகக் கொண்டது, ஆனால் எதிர்காலத்தில் மற்ற சமூகங்களை குறிவைப்பதற்கான ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறது.

வக்ஃப் திருத்த மசோதா.!ஒப்புதல் கொடுத்த குடியரசுத் தலைவர்- அமலுக்கு வந்தது சட்டம்

Latest Videos

கத்தோலிக்க திருச்சபை vs வக்பு வாரியம்

இந்தச் சட்டம் இந்தியாவின் கருத்தையே தாக்குவதாலும், மத சுதந்திர உரிமையான 25வது பிரிவை மீறுவதாலும் காங்கிரஸ் கட்சி இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸின் அதிகாரபூர்வ இதழான ஆர்கனைசர், "இந்தியாவில் யாருக்கு அதிக நிலம் உள்ளது ? கத்தோலிக்க திருச்சபை vs வக்பு வாரியம் - ஒரு விவாதம்" என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் கத்தோலிக்க அமைப்புகளுக்கு 7 கோடி ஹெக்டேர்கள் நிலம் இருப்பதாகக் கூறியுள்ளது. 

கத்தோலிக்க அமைப்புகளுக்கு 7 கோடி ஹெக்டேர்கள் நிலம்

அவை மிகப்பெரிய அரசு சாரா நில உரிமையாளராக இருப்பதாக விமர்சித்துள்ளது. வக்பு சட்ட திருத்தத்தை செய்து முடித்த பின்னர் அடுத்து ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் மற்றொரு சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களை இதன் மூலம் குறிவைத்துள்ளது. 1930களில், ஹிட்லர் தலைமையிலான நாஜி கட்சியினர், இதே பாணியில் முதலில் கம்யூனிஸ்டுகளையும், அடுததாக தொழிற்சங்கவாதிகளையும், பின்னர் யூதர்களையும் பிடித்து அழித்தனர். அதே பாணியில் இன்று பாஜக தலைமையிலான சங் பரிவார் குழுவினர்,

வக்ஃபு மசோதா: முனம்பம் மக்களின் நிலப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

அடுத்தது கிறிஸ்தவர்கள் குறி

முதலில் முஸ்லீம்களை குறி வைத்துள்ளன. அடுத்தது கிறிஸ்தவர்களை குறி வைக்க திட்டமிட்டுள்ளது தெளிவாகியுள்ளது. அன்று ஜெர்மனியில், அவர்களுக்காக குரல் கொடுக்க யாருமில்லை. ஆனால் இன்று சிறுபான்மையினர் மற்றும் விளிம்பு நிலை மக்களை, மோடி அரசின் பாசிச தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன் கார்கே தலைமையிலான காங்கிரஸ் பேரியக்கமும் உள்ளனர். அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் சாசனத்தை அழிக்க பாஜக, ஆர்.எஸ்.எஸ் முன்னெடுத்து வரும் இத்தகைய நாச வேலைகளை காங்கிரஸ் பேரியக்கம் முழு மூச்சாக எதிர்க்கும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 

vuukle one pixel image
click me!