ரூ.37 கோடி மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு பள்ளி கட்டிடங்கள்..

Published : Nov 02, 2022, 02:12 PM IST
ரூ.37 கோடி மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு பள்ளி கட்டிடங்கள்..

சுருக்கம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்காக ரூ.37.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிகள் மற்றும் பள்ளிக் கட்டடங்கள் மற்றும் 6 புதிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தாட்கோ அலுவலகங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,”  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை, மதுரை, திருவாரூர், தென்காசி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 9 கோடியே 92 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களுக்கான 6 விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். 

மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 10 கோடியே 51 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 பள்ளிக்கட்டடங்களையும் செங்கல்பட்டு, நீலகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 17 கோடியே 22 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார். 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை, மதுரை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 3 கோடி மதிப்பில் கட்டுப்பட்டு மூன்று மாணவர் விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். கொரடாச்சேரியில் மாணவர் விடுதிக் கட்டடம், தென்காசி மாவட்டம் சோலைச்சேரியில் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் படிக்க:ராஜராஜ சோழனின் பிறந்த நாள்..! இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கிருஷ்ணகிரி போஜனபள்ளி உள்ளிட்ட 6 இடங்களில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் விடுதிக் கட்டடங்கள்; திருவள்ளூர் மாவட்டம் தேர்வாயில்,காஞ்சிபுரம் மாவட்டம் மௌலிவாக்கம், ஈஞ்சம்பாக்கம், மயிலாடுதுறை மாவட்டம் கொண்டல் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கான வகுப்பறைக் கட்டடங்கள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டம் குமிழியில் 12 கோடி ரூபாய் செலவிலும், நீலகிரி மாவட்டத்தில் 2 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவிலும், நாமக்கல் மாவட்டத்தில் 2 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவிலும் 3 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கான கட்டடங்கள் என மொத்தம் 37 கோடியே 66 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக் கட்டடங்கள் இன்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டன. 

மேலும், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பயன்பெறும் பொருட்டு அம்மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தாட்கோ அலுவலகங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கென தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினிப் பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 197 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

மேலும் படிக்க:கந்தூரி சந்தனக்கூடு திருவிழா.. 45 கிலோ சந்தனக்கட்டைகள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.. முதலமைச்சர் அறிவிப்பு

பின்னர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு Indian Institute of Technology மூலம் B.S. Data Science & Applications, எச்.சி.எல் நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பயில பயிற்சி தொகை, Indian Health Care மூலம் Medical Coding பயிற்சி, ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்ட்யூட் மூலம் B.Sc., (Hospitality & Hotel Administration) மற்றும் Diploma in Food Production, Craftsman Ship ஆகிய வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சிக்கு தேர்வாகியுள்ள 130 மாணவ, மாணவியர்களுக்கு ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அலறி துடித்த பயணிகளின் நிலை என்ன?