பல மணி நேரம் போராடியும் அணைக்க முடியாத தீ...! கரும் புகை சூழ்ந்த சேலம்...! (வீடியோ)

Jun 8, 2018, 5:07 PM IST



சேலத்தில் உள்ள கே.ஆர்.தோப்பூர் துணை மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளது 

இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்தவாறு காணப்படுகிறது. துணை மின் நிலையத்தில் ஏற்பட்டு உள்ள பயங்கர தீ விபத்து காரணமாக அப்குதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுஉள்ளது.

மேலும், இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

 சுமார் ஐந்து தீயணைப்பு வண்டியுடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பெரும் போராட்ட்த்திற்கு பிறகு தற்போது தான் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

இன்று காலை நடைப்பெற்ற இந்த சம்பவத்தால், சேலம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட தன் காரணமாக பொதுமக்கள் பெரும்  சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.