ரெடியா…? 15 மாவட்டங்களில் இன்னிக்கு பட்டைய கிளப்புமாம் கனமழை..! வானிலை மையம்

By manimegalai aFirst Published Oct 1, 2021, 7:43 AM IST
Highlights

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தேனி, திண்டுக்கல், கோவை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை கொட்டியது. தொடர் மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்தும் அதிகரித்து உள்ளது.

இந் நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ள வானிலை மையம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று கூறி உள்ளது.

குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது

சென்னையிலும் லேசான, மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறி உள்ளது. நாளை முதல் குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேமற்கு வங்க கடல் பகுதிகளில் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

click me!