ஒரே நாளில் எகிறி அடித்த பெட்ரோல், டீசல் விலை… கலங்கும் வாகன ஓட்டிகள்

By manimegalai aFirst Published Oct 10, 2021, 8:09 AM IST
Highlights

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது, வாகன ஓட்டிகளை கலங்க வைத்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது, வாகன ஓட்டிகளை கலங்க வைத்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலைகளை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் பெரிய அளவில் உயர்ந்து காணப்பட்டது.

இந் நிலையில் இன்றும் விலை அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 26 காசுகள் அதிகரித்து ரூ. 101.53 ஆக உயர்ந்துள்ளது. டீசல் விலை ஒரு லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ.97.26 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

வழக்கமாக 5 காசுகள், 10 காசுகள் என்று விலை உயர்வு காணப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக இந்த நிலை மாறி இருக்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகளும், டீசல் லிட்டருக்கு 33 காசுகளும் உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகளை கலங்கடிக்க வைத்துள்ளது. இந்த புதிய விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

click me!