
சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக, தலைமைக் காவலர் கோதண்டபாணி தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். ஆவடி காவலர் குடியிருப்பை சேர்ந்த அவர், 2021ஆம் ஆண்டு சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்ட மகளை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தையின் கால் பாதம் அகற்றப்பட்டதாக அவர் குற்றம் சாட்டுகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக நீதி கேட்டு போராடி வரும் அவர், தலைமைச் செயலகத்தில் சீருடையில் வந்து திமுக கொடியை எரித்து எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.