
தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. தமிழக அரசு விவசாயிகளுக்காக இலவச மின்சாரம், சூரியசக்தி பம்ப்செட்டுகள், உழவன் செயலி, முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விவசாயிகள் களை எடுக்கும் இயந்திரம் வாங்க 70 சதவிகிதம் வரை மானியத்தை வழங்கி வருகிறது.