பெற்ற தாயை சரமாரி அடித்து கொலை மகன் கைது!

By manimegalai aFirst Published Dec 22, 2018, 1:27 PM IST
Highlights


சேலம் மாவட்டம் நங்கவள்ளி கே.எம்.பி.நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். மீன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வைடூரியம் (58). இவர்களது மகன் செந்தில்குமார் (35).

சேலம் மாவட்டம் நங்கவள்ளி கே.எம்.பி.நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். மீன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வைடூரியம் (58). இவர்களது மகன் செந்தில்குமார் (35).

கடந்த 6 மாதங்களுக்கு முன் மூலக்காட்டை சேர்ந்த பரமேஸ்வரி (26) என்ற பெண்ணுக்கும், செந்தில்குமாருக்கு ம் திருமணம் நடந்தது. அவருடன் அடிக்கடி செந்தில்குமார் தகராறில் ஈடுபட்டதால், பரமேஸ்வரி கடந்த 2 மாதத்துக்கு முன், தனது பெற்றோர் வீட்டுககு சென்று விட்டார்.

இந்நிலையில் வைடூரியத்திற்கும், மகன் செந்தில்குமாருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் தாய், மகன் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கடும் வாக்குவாதம் நடந்தது. இதில், ஆத்திரமடைந்த செந்தில்குமார், வீட்டின் அருகில் கிடந்த அரிவாள் மற்றும் உருட்டு கட்டையால் தாயை சரமாரியாக தாக்கினார். அதனை தடுக்க வந்த தந்தை வெங்கடேசனையும் தாக்கினார்.
இதில் நிலைகுலைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்ததும், வெங்கடேசன் அங்கிருந்து தப்பிவிட்டார். அவர்கள், படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமைனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் வைடூரியம் பரிதாபமாக இறந்தார். வெங்கடேசனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தகவலறிந்து நங்கவள்ளி போலீசார் சம்பவ இடத்து விசாரித்தனர். அப்போது செந்தில்குமாருக்கு சற்று மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில்  அது அதிகரிப்பது தெரிந்தது. இதையொட்டி நேற்று பவுர்ணமி என்பதால், அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு தாயுடன் தகராறில் ஈடுபட்டு வெறித்தனமாக அவரை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதற்கிடையில் அதே பகுதியில் தலைமறைவாக இருந்த செந்தில்குமாரை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் மனநிலை பாதிப்பு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.    

click me!