"70 ஆண்டுகால வைகை அணை பிரச்சினைக்கு 2 மாதங்களில் தீர்வு!" — அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆய்வு!

Published : Jun 24, 2026, 09:00 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை கட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், அங்கு பெருமளவில் மணல் மற்றும் வண்டல் மண் தேங்கியுள்ளது. இதனால் அணையின் நீர் சேமிப்பு திறன் தற்போது வெறும் 18-20% ஆகக் குறைந்துள்ளது. பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் வைகை அணையில் மேற்கொள்ளப்படவுள்ள தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மத்திய அரசின் ஒப்புதலை தமிழக அரசு ஏற்கனவே பெற்றுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தூர்வாரும் பணிகளைத் தொடங்கி, வரவிருக்கும் மழைக்காலத்திற்குள் அணையின் நீர் சேமிப்பு திறனை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுமார் 4,000 விவசாயிகள் இந்த வண்டல் மண்ணை இலவசமாகப் பெறப் பதிவு செய்துள்ள நிலையில், தனியார் நபர்களுக்கு சட்டவிரோதமாக மண் விற்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

03:13தாய் மாமன் தங்க மோதிரம்! யாருக்கு, எப்போது கிடைக்கும் தெரியுமா? பிறந்த தேதிய குறிச்சு வைச்சுக்கோங்க!
08:32வரி ஏய்ப்புகளுக்கு செக்... ஆன்மீகத் துறையில் புதிய புரட்சி! - மாஸ் காட்டிய தமிழக இளம் அமைச்சர் ரமேஷ்
08:06விஜய் விளம்பர அரசியல் செய்கிறார்...மக்கள் பிரச்சினையில் கோட்டை விட்டுட்டீங்க ! - எடப்பாடி பழனிசாமி
08:48ஸ்டாலினையும், எடப்பாடியையும் நம்பாதவர்கள் எங்களிடம் வருகிறார்கள் ! நிர்மல்குமார் பரபரப்பு பேச்சு
02:05தமிழகத்தை நோக்கிப் பாயும் சர்வதேச முதலீடுகள்? முதல்வர் விஜய்யை சந்தித்த கஜகஸ்தான் தூதர் !
06:20மருத்துவத்துறையில் அதிரடி மாற்றம்......முதல்வர் விஜய் பணி ஆணைகளை வழங்கி அதிரடி!
03:40CM Vijay| மருத்துவர்களுக்கு மகுடம் சூட்டிய முதல்வர்...நடுநாயகமாக அமர்ந்த ஜனநாயகன்! வைரலாகும் வீடியோ
05:49சென்னை விமான நிலையத்தில் உருக்கமான தருணம்: வியட்நாம் விபத்தில் பலியான 2 தமிழர்களுக்கு மலரஞ்சலி!
07:42"அரசு பள்ளியே எனக்கு எல்லாவற்றையும் தந்தது" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
03:38மேடையை விட்டு கீழே இறங்கி மனிதநேயத்தை வெளிப்படுத்திய முதல்வர் விஜய்... பாராட்டில் குவியும் மக்கள்!