"70 ஆண்டுகால வைகை அணை பிரச்சினைக்கு 2 மாதங்களில் தீர்வு!" — அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆய்வு!

Published : Jun 24, 2026, 09:00 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை கட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், அங்கு பெருமளவில் மணல் மற்றும் வண்டல் மண் தேங்கியுள்ளது. இதனால் அணையின் நீர் சேமிப்பு திறன் தற்போது வெறும் 18-20% ஆகக் குறைந்துள்ளது. பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் வைகை அணையில் மேற்கொள்ளப்படவுள்ள தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மத்திய அரசின் ஒப்புதலை தமிழக அரசு ஏற்கனவே பெற்றுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தூர்வாரும் பணிகளைத் தொடங்கி, வரவிருக்கும் மழைக்காலத்திற்குள் அணையின் நீர் சேமிப்பு திறனை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுமார் 4,000 விவசாயிகள் இந்த வண்டல் மண்ணை இலவசமாகப் பெறப் பதிவு செய்துள்ள நிலையில், தனியார் நபர்களுக்கு சட்டவிரோதமாக மண் விற்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

04:58சென்னையில் 12,000 வலம்புரி சங்குகளால் உருவாக்கப்பட்ட 40 அடி விநாயகர் சிலை !
02:44திருச்சியில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை: சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து!
02:42விநாயகர் சதுர்த்தி: திருச்சி தாயுமானசுவாமி திருக்கோயிலில் விமரிசையாக நடந்த சிறப்பு பூஜைகள்!
03:19சேகர் பாபு அவருக்கு எல்லாத்தையும் பண்றதுதான் அதிகாரிகளோட வேலையா? அமைச்சர் எஸ். ரமேஷ் கேள்வி
03:04அனைத்து திட்டங்களும் மக்களை நாடிச் செல்கிற நிலையிலே இருக்கிறது.! செங்கோட்டையன் பேட்டி
04:54ஆர்.கே. நகரில் விஜய் ரூபத்தில் விநாயகர் சிலைகள்: உற்சாகத்தில் த.வெ.க தொண்டர்கள்!
03:41கோயம்பேடு இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு: சிறப்பு பூஜை செய்த மத்திய அமைச்சர் எல். முருகன்!
10:20முதலமைச்சர் விஜயைக் கண்டித்து திருச்சியில் திமுக ஆர்ப்பாட்டம் ! K.N. நேரு மற்றும் அமைச்சர்கள் ஆவேசம்
06:59மு.க.ஸ்டாலின் தியாகத்தை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது?: ஆர்.எஸ். பாரதி ஆவேசம்
04:27மு.க.ஸ்டாலின் குறித்துப் பேச்சு: சட்டப்பேரவையில் எழுந்த சர்ச்சையைக் கண்டித்து திமுக அதிரடி போராட்டம்