தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய மேடையில் பேசிய அமைச்சர் என். ஆனந்த், கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் மிக முக்கியமான வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். "நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம்.. எப்போதும் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.. உங்களை நாங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்வோம், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்" என்று மேடையில் அவர் பேசிய பேச்சு தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.