தமிழக கேரள எல்லையான மதுக்கரை வனப்பகுதியில் ரயில் பாதையில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பது தொடர்ந்தது. இதை கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் ரயில் பாதையில் பொருத்தப்பட்டது. இந்த முயற்சி பெரிய அளவில் பலன் கொடுத்தது. இந்நிலையில் வனவிலங்குகள் சார்ந்த பாதுகாப்பை பலப்படுத்த புதிய முயற்சியாக டிரோன் கண்காணிப்பு பிரிவு இன்று திறக்கப்பட்டது.