நாட்டில் முதன்முறையாக வித்தியாசமான நேர்மையான தீர்ப்பு வழங்கிய மதுரை நீதிமன்றம்!

First Published Jun 1, 2018, 4:52 PM IST
Highlights
Madurai court issued the verdict honest!


மதுரை மாவட்டம், மேலூர் அருகே கருங்காலக்குடியை சேர்ந்தவர் கண்ணன் (37). இவர் கடந்த மார்ச் மாதம், 23 ஆம் தேதி, இரவு 8 மணியளவில், மதுரை-திருச்சி இடையிலான தேசிய நெடுஞசாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். 

அப்போது சாலை விதிகளுக்கு மாறாக எதிர் திசையில் நின்ற லாரி மீது மோதி படுகாயமடைந்த கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து கண்ணனின் மனைவி வாசுகி மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில், மதுரை நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விபத்தில் உயிரிழந்த கண்ணனுக்கு உரிய இழப்பீடு கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் மதுரை - திருச்சி இடையிலான தேசிய நெடுஞசாலையில் விபத்தை ஏற்படுத்திய லாரி, கடந்த 2 நாட்களாக நின்றதும், இதை முறையாக எடுத்துச்செல்ல தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்காததாலும்தான் விபத்து ஏற்பட்டது என்றும் சொல்லப்பட்டது. 

இதையடுத்து, இந்த வழக்கு விசராயின்பொது, நீதிபதி சி.சஞ்சய்பாபா தாமாக முன்வந்து வழக்கில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய தலைமை அதிகாரியை எதிர் மனுதாரராக சேர்த்தது. இரு தரப்பு விவாதங்களையும் விசாரித்த, நீதிபதி சி.சஞ்சய்பாபா தீர்ப்பு வழங்கயில் நான்கு வழிச்சாலைகளில் கட்டணம் வசூலிப்பது மட்டுமின்றி, சாலைகளை முறையாக பராமரிப்பதும், விபத்து ஏற்படாமல் தடுப்பதும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் பணி. ஆனால் தங்களது பணியை கவனிக்க அவர்கள் தவறி விட்டனர். 

இந்த வழக்கில், ரூ. 19,97,800 இழப்பீடாக வழங்க உத்தரவிடப்படுகிறது. மேலும், மனுதாரரின் கணவர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியுள்ளார். எனவே, இழப்பீட்டில் 15 சதவீதம் குறைக்கப்படுகிறது. மீதமுள்ள பணத்தில், லாரி இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நிறுவனம் 50 சதவீதமும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 35 சதவீதமும் என கணக்கிட்டு மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

விபத்து வழக்கில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது, இதுவே நாட்டில் முதன்முறை. நாட்டில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கு பராமரிப்பு இல்லாத சாலைகள் தான் காரணம் என அனைவரும் குற்றம் சட்டி வந்த நிலையில், நேர்மையாக விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்

click me!