நாளை சந்திரகிரகணம்.! பக்தர்களுக்கு திருச்செந்தூர் கோயில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published : Sep 06, 2025, 07:56 AM IST
Thiruchendur

சுருக்கம்

2025ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 7-8 அன்று நிகழும். இதனையடுத்து திருச்செந்தூர் முருகன் கோவில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Temple closures during eclipse : சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, மற்றும் சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் ஏற்படும் வானியல் நிகழ்வு ஆகும். 2025-ஆம் ஆண்டில் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழ உள்ளது. முதல் சந்திர கிரகணம் கடந்த மார்ச் 14ஆம் தேதி நிகழ்ந்தது. ஆனால் இந்தியாவில் தெரியவில்லை. இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 7-8, 2025 அன்று நிகழ உள்ளது. இது ஒரு பகுதி சந்திர கிரகணமாகும், இது இந்தியாவில் இரவு 9:50 மணி முதல் நள்ளிரவு 1:26 மணி வரை தெரியும். இந்த கிரகணம் கும்ப ராசியில் நிகழ்கிறது, மேலும் இதன் தாக்கம் ஆறு மாதங்கள் வரை இருக்கலாம்.

இந்தியாவில் சந்திர கிரகணம்

இதனையடுத்து பெரும்பாலான கோயில்களில் வாயில்கள் மூடப்படும். இதனையடுத்து சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை மறுநாள் 7 ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மறுநாள் 7 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். 4.40 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடைபெறும்.

திருச்செந்தூர் கோயில் முக்கிய அறிவிப்பு

தொடர்ந்து, பகல் 2 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 3 மணிக்கு ராக்கால அபிஷேகமும், 5 மணிக்கு பள்ளியறை மற்றும் நடை திருக்காப்பிடுதல் நடைபெறும். அன்றைய தினம் அனைத்து பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை மற்றும் மூத்த குடிமக்கள் செல்லும் சிறப்பு தரிசன வரிசைகளிலும் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின் மறுநாள் செப்டம்பர் 8ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்