48 சிறந்த காவல் நிலையங்களுக்கு விருது! தமிழக டி.ஜி.பி. அறிவிப்பு!

Published : Sep 05, 2025, 09:26 PM IST
Best Police Station Award

சுருக்கம்

தமிழகத்தில் 48 காவல் நிலையங்கள் சிறந்தவையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட உள்ளன. முதல் மூன்று இடங்களைப் பிடித்த காவல் நிலையங்களுக்கு முதலமைச்சர் ஏற்கனவே பரிசளித்த நிலையில், தற்போது மீதமுள்ள காவல் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 48 காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாகத் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பரிசுகள் நாளை (சனிக்கிழமை) வழங்கப்படும் என தமிழக டி.ஜி.பி. அலுவலகம் சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது.

ஏற்கனவே, முதல் மூன்று இடங்களைப் பிடித்த காவல் நிலையங்களுக்கான பரிசுகளை முதலமைச்சர் வழங்கியிருந்த நிலையில், தற்போது மீதமுள்ள காவல் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பரிசு பெறும் காவல் நிலையங்கள்

தேர்வு செய்யப்பட்ட காவல் நிலையங்களில், தென்மண்டலத்தில் இருந்து மதுரை உசிலம்பட்டி டவுன், விருதுநகரின் மல்லாங்கிணறு, சிவகங்கை டவுன், தென்காசியின் பாவூர்சத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

சான்றிதழ் மற்றும் பரிசு

சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் நிலைய பொறுப்பாளர், சான்றிதழ் மற்றும் பரிசுகளைப் பெற்றுச் செல்லுமாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விருது, காவல் நிலையங்களின் செயல்பாடுகள், பொதுமக்களுடனான அணுகுமுறை, குற்றங்களைக் குறைப்பதில் காட்டும் திறமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த அங்கீகாரம், காவல் துறையினருக்கு மேலும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பேரவையில் பிரேமலதா விளாசல்: விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாத அரசுக்கு கண்டனம்!
மேகதாட்டு விவகாரத்தில் அரசின் மெத்தனப் போக்கைக் கடுமையாகத் தாக்கிய பிரேமலதா விஜயகாந்த் !