சென்னையில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் - 2000 ரூபாய் நோட்டுகளை பெற்று சென்றனர்

Asianet News Tamil  
Published : Nov 11, 2016, 02:58 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
சென்னையில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் - 2000 ரூபாய் நோட்டுகளை பெற்று சென்றனர்

சுருக்கம்

சென்னையில் வங்கிகள் மூலம் தங்கள் பணத்தை மாற்றிகொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து இன்று வங்கிகள் திறந்திருந்தன. 

காலையில் 6 மணிமுதலே மக்கள் வங்கிகள் முன்பு கூடிவிட்டனர். அவர்களை போலீசார் வரிசைப்படுத்தி பணத்தை பெறும் ஏற்பாட்டை செய்தனர். வரிசையில் நிற்பவர்களிடம் அடையாள அட்டை வைத்திருக்கிறார்களா என போலீசார் கேட்டறிந்தனர்.

 சென்னை முழுதும் அனைத்து வங்கிகள் முன்பும் கூட்டம் அலைமோதியது. படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து பணத்தை கொடுத்து புதிய 2000 ரூபாய் தாளை பெறுவதற்கு பொதுமக்களுக்கு சுமார் ஒரு மணி முதல் ஒன்றரை மணி நேரம் ஆனது. 

சென்னையில் பல இடங்களில் பணம் வருவதற்கு கால தாமதமானதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பல இடங்களில் மதியம் 12 மணிக்கு மேல் தான் பணம் வரும் என அறிவித்தனர். 

வங்கிகளில் 2000 ரூபாய் மாற்றிய பொதுமக்கள் அதை ஆச்சர்யத்துடனும் , மகிழ்ச்சியுடனும்  அதை எடுத்து சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு.. அரசு தேர்வுத் துறைக்கு ஆசிரியர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!
மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அட! அடுத்த மாதம் இத்தனை நாட்கள் லீவா? மாணவர்கள் குஷி!