தஞ்சையை அடைந்தது காவிரி தண்ணீர்...! இன்ப வெள்ளத்தில் விவசாயிகள்..!

 
Published : Sep 19, 2017, 03:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
தஞ்சையை அடைந்தது காவிரி தண்ணீர்...! இன்ப வெள்ளத்தில் விவசாயிகள்..!

சுருக்கம்

kaveri water entered in thanjavoor

தமிழகத்தில் பறந்து விரிந்திருக்கும் காவிரி ஆற்றில் தண்ணீர்  வந்ததை அடுத்து, விவசாயிகள்  காவிரி  தண்ணீரை வணங்கி வரவேற்றனர்

144 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி மகா புஷ்கரம்

144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் காவிரி மகா புஷ்கரம் விழாவிற்காக தண்ணீர் திறந்துவிட கோரி பக்தர்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் தமிழக  அரசிடம்  கோரிக்கை  வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து,,கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு கடந்த 15ம் தேதி வந்தது என்பது  குறிப்பிடத்தக்கது.

கும்பகோணத்தை வந்தடைந்தது காவிரி தண்ணீர்

கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  கும்பகோணத்துக்கு வந்தது.

காவிரி தண்ணீரை வணங்கி வரவேற்ற விவசாயிகள்   

காவிரி தண்ணீர்  வருவதை கண்ட  விவசாயிகள்  பொதுமக்கள்  அனைவரும்  தங்களுக்குள் மகிழ்ச்சியை  வெளிப்படுத்தி  பேசினார். மேலும்  மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆரத்தி எடுத்து, பால் ஊற்றி, காவிரித் தாய்க்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆரவாரமாக  வரவேற்றனர்

PREV
click me!

Recommended Stories

சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்
கரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்