55 நாட்களுக்குப் பிறகு திமுக தாக்கிய விஜய்... அண்ணாவை மறந்துவிட்டு மக்களை ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு!

Published : Nov 23, 2025, 11:48 AM IST
Kachipuram Vijay Speech against DMK Party after 55 Days Karur Stampede

சுருக்கம்

அறிஞர் அண்ணா ஆரம்பித்த கட்சியை, கட்சி கொடியை மறந்துவிட்டு மக்களை ஏமாற்றுவதாக தவெக தலைவர் தளபதி விஜய் திமுகவை விமர்சித்து பேசி வருகிறார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக தற்போது அறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேசி வருகிறார். கிட்டத்தட்ட 55 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக விஜய் காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசி வருகிறார்.

சேலத்தில் பிரசாரம் செய்ய தவெகவினர் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் காவல்துறை இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. இந்த நிலையில், சேலத்துக்கு முன்பாக விஜய் இன்று காஞ்சிபுரத்தில் மக்களை சந்தித்து பேசி வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி அரங்கத்தில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது

காஞ்சிபுரத்துக்கும், நமக்கும் சம்பந்தம் உண்டு. ஏற்கனவே பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிந்து பரந்தூர் மக்களை சந்தித்து கள வேட்டையை தொடங்கியது காஞ்சிபுரம் தான். அறிஞர் அண்ணா ஆரம்பித்த கட்சி என்பதை மறந்துவிட்டு மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
எழும்பூர் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!