ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்.12 விடுமுறை - இடைத்தேர்தலையொட்டி தலைமை செயலாளர் அறிவிப்பு...

 
Published : Mar 23, 2017, 07:43 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்.12 விடுமுறை - இடைத்தேர்தலையொட்டி தலைமை செயலாளர் அறிவிப்பு...

சுருக்கம்

In the April 12 holiday arkenakar block - itaittertalaiyotti Chief Secretarys announcement

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி ஏப்ரல் 12 ஆம் தேதி விடுமுறை என தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவையடுத்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதற்கான மனுத்தாக்கல் கடந்த மார்ச் 16 ஆம் தேதி தொடங்கி இன்று நிறைவு பெற்றது. இதுவரை 127 பேர் ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

அதில் கடைசி நாளான இன்று மட்டும் 72 பேர் மனுதாக்கல் செய்தனர். இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதால் ஒ.பி.எஸ் தரப்பும் சசிகலா தரப்பும் வேறு ஒரு சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

மேலும் ஆர்.கே.நகரில் பலமுனை போட்டிகள் நிலவுவதால் 3 தீவிர கண்காணிப்பு குழுவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி ஏப்ரல் 12 ஆம் தேதி விடுமுறை என தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"