Red Alert: கொட்டி தீர்க்கப்போகும் கனமழை; தமிழகத்திற்க ரெட் அலர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்

Published : May 17, 2024, 10:36 AM ISTUpdated : May 17, 2024, 10:53 AM IST
Red Alert: கொட்டி தீர்க்கப்போகும் கனமழை; தமிழகத்திற்க ரெட் அலர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்

சுருக்கம்

தமிழகத்தில் வருகின்ற 20ம் தேதி அதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் சிக்னலை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் மிகவும் உக்கிரமாக இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பொழிந்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். குறிப்பாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்து வருவதால் நீர் நிலைகளில் நீர் இருப்பு வெகுவாக உயர்ந்து வருகிறது.

இது வெறும் ட்ரெய்லர் தான்.. இனிமே தான் மெயின் பிக்சரே இருக்கு.. குட்நியூஸ் சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்..

இதனிடையே கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டு இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Courtallam Falls : குற்றாலத்திற்கு போறீங்களா.? இதமான காற்றோடு அருவியில் தண்ணீர் கொட்டுது-இதோ லேட்டஸ்ட் அப்டேட்

மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மே 20ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 50 கி.மீ. வேகம் வரை தரைக்காற்றுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்..! அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் ஐக்கியம்! விஜய் குஷி!
இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!