தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. 15 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை அப்டேட்

By Thanalakshmi VFirst Published Oct 5, 2022, 11:12 AM IST
Highlights

தமிழகத்தில் நாளை மறுநாள் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் காலை முதல் லேசான மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
 

தமிழகத்தில் நாளை மறுநாள் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் காலை முதல் லேசான மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

மத்திய மேற்கு வங்கக்கடலில்‌ நிலவும்‌ காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று முதல் 8 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:ஒய்யாரமாக சாலையை கடந்த யானை கூட்டம்; அலறியடித்து ஓட்டம் பிடித்த செல்பி பிரியர்கள்

மேலும் 7 , 8 ஆகிய தேதிகளில் கடலார்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை,
தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்சராப்பள்ளி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ‌ 
 
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழை பெய்யக்கூடும்‌. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை: குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 இலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:நாட்டு துப்பாக்கியோடு மான் வேட்டைக்கு சென்றவர்கள் சிசிடிவியால் சிக்கிய சம்பவம்.. அப்பறம் என்னாச்சு..?
 

click me!