கோவையில் எய்ம்ஸ் .. 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி.. சுகாதாரத்துறை அமைச்சர் கோரிக்கை..

Published : Jun 26, 2022, 05:57 PM IST
கோவையில் எய்ம்ஸ் .. 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி.. சுகாதாரத்துறை அமைச்சர் கோரிக்கை..

சுருக்கம்

6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கோயம்புத்தூரில் எய்ம்ஸ் அமைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரணியன் கோரிக்கை வைத்தார்.  

சென்னை ஓமந்தூரர் பன்நோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை மன்சுக் மாண்டவியா கலந்துக்கொண்டார். அப்போது  6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி, கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட 7 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

மேலும் படிக்க: அதிகரித்தது பாஜகவின் பலம்..!இடைத்தேர்தலில் 2 மக்களவை மற்றும் 3 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி

அந்த மனுவில்

1. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள சட்டமுன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தர வேண்டும்.

2. கோயம்புத்தூரில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை துவங்க வேண்டும்

3. மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்கு முறை விதிமுறைகள், முதுநிலை மருத்துவக் கல்வியில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்ப்பதில் மாநிலங்களின் பங்கினை குறைக்கும் விதிகள் நீக்கப்பட வேண்டும் என்று 31.07.2021 அன்று கடிதம் அனுப்பியுள்ளோம். வரைவு விதிமுறைகளில் பிரிவு 10.1 மற்றும் அதன் கீழ் உள்ள துணைப் பிரிவுகள் மருத்துவக் கழகத்தில் பதிவு செய்ய தகுதி தேர்வை நடைமுறைப்படுத்துவதற்கும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வாக மாற்றுவது என்பதை மத்திய அரசு கைவிடவேண்டும். மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான தற்போதைய கலந்தாய்வு முறையை மாற்றுவதை நோக்கமாக கொண்ட முயற்சிகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இது கூட்டாட்சி தத்துவத்தின் ஆணி வேரையை நசுக்குவதாகும்.

மேலும் படிக்க:40 எம்எல்ஏக்களின் உடல்கள் நேராக போஸ்ட்மார்டத்திற்கு அனுப்பப்படும்… சஞ்சய் ராவத் பரபரப்பு கருத்து!!

4. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவ வேண்டும்

5.உக்ரைனில் படித்த மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வழிவகை காண வேண்டும்.

6.பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களில் வெளிநாட்டில் மருத்துவக் கல்வி படித்த மாணவர்களின் எண்ணிக்கையை 7.50 விழுக்காட்டிலிருந்து – 20 விழுக்காடாக உயர்த்த வேண்டுமென்றும்,

7. 50 துணை சுகாதார நிலையங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களாகவும், 25 ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்த வேண்டும்.
 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி