அரசு பள்ளி ஆசிரியர்கள் முறையாக செயல்பட வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தல்...

 
Published : Jun 20, 2017, 02:19 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
அரசு பள்ளி ஆசிரியர்கள் முறையாக செயல்பட வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தல்...

சுருக்கம்

Government teachers should function properly - Madurai High Court instructed

அரசு பள்ளி ஆசிரியர்கள் முறையாக செயல்பட்டால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளியை நாடுகிறார்கள் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் நவோதாயா பள்ளி அமைக்க கோரி குமரி மகாசபா செயலர் ஜெயக்குமார் தாமஸ் பொதுநல மனு ஒன்றை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார்.

அதில், கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை, மத்திய அரசு நடத்துவதாகவும், ஆனால் தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கபட்டிருந்தது.

தமிழகத்தில், மாவட்டந்தோறும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை துவக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடபட்டிருந்தது.

மேலும் தமிழகத்தில் மட்டும் நவோதயா பள்ளிகள் தொடங்க போதிய ஒத்துழைப்பு இல்லை என தெரிவிக்கபட்டிருந்தது.

இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு தமிழகத்தில் போதிய அளவிற்கு பள்ளிகள் இருப்பதால் நவோதயா பள்ளி தேவை இலை என தெரிவித்தது.  

இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் முறையாக செயல்பட்டால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளியை நாடுகிறார்கள் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆம்னி பேருந்து ஆற்று பாலத்தில் தடுப்பை உடைத்து தொங்கிய பேருந்து.. தூக்கித்தில் இருந்த 40 பயணிகளின் நிலை என்ன?
மோட்டர் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை!