இனி ரேஷன் கடைகளிலும் கூகுள் பே, போன் பே மூலம் பணம் செலுத்தலாம்... வெளியானது சூப்பர் அறிவிப்பு!!

Published : May 10, 2023, 12:14 AM IST
இனி ரேஷன் கடைகளிலும் கூகுள் பே, போன் பே மூலம் பணம் செலுத்தலாம்... வெளியானது சூப்பர் அறிவிப்பு!!

சுருக்கம்

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மே மாதம் முதல் கூகுள் பே, போன் பே, பேடி எம் போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்தும் முறையை அமல்படுத்துமாறு கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மே மாதம் முதல் கூகுள் பே, போன் பே, பேடி எம் போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்தும் முறையை அமல்படுத்துமாறு கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு, கூட்டுறவுத் துறை பதிவாளர் சங்கர் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள 683 நியாய விலைக்கடைகளிலும் விரைவு எதிர்வினை (QR Code) குறியீடு மூலம் ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: நீலகிரி யானைகள் முகாமில் குட்டி யானைகளுக்கு கும்கி பயிற்சி வழங்கும் வன அதிகாரிகள்

இந்த நிலையில், ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள எதுவாக கோயம்புத்தூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, மதுரை, சென்னை, வேலூர். இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய 12 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UP) வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதர மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் இன்னும் ஒருவாரத்தில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) வசதி ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, அனைத்து மண்டலங்களிலும் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளில் Paytm, Google Pay, Phone Pe போன்ற UPI வசதிகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழக அமைச்சரவையில் மாற்றம்... நாசர் பதிவியில் இருந்து விடுவிப்பு; டி.ஆர்.பாலுவின் மகனுக்கு வாய்ப்பு!!

இது குறித்து நியாயவிலைக் கடைகளை நடத்தும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி மண்டலங்களில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் 31.05.2023 - க்குள் Paytm, Google Pay, Phone Pe போன்ற UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்து நிறைவறிக்கையினை இல்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இது குறித்து தினசரி முன்னேற்ற அறிக்கையினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamilnadu Power Cut: போன், லேப்டாப்பில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? இதோ லிஸ்ட்!
Heavy Rain: மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகம்! விடாமல் அடிச்சு ஊத்தப்போகும் கனமழை! கோவை, சென்னையின் நிலை என்ன?