விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடும் வகையில், தூத்துக்குடியில் பிரம்மாண்டமான எல்லைப் பந்தய மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த காளைகளும், சாரதிகளும் கலந்துகொண்டு விறுவிறுப்பாகக் களமிறங்கினர். பந்தய எல்லையை நோக்கிச் சீறிப்பாய்ந்த காளைகளை வழியெங்கும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் கரவொலி எழுப்பி உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். வெற்றியெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் விழாக்குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.