
சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்துகொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடிய அவர், "பை பை ஸ்டாலின்" என்று ஆக்ரோஷமாக முழக்கமிட்டது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து பேசிய அவர், சிறுபான்மையினரின் நலன் குறித்து முக்கிய கருத்துகளைப் பதிவு செய்தார். குறிப்பாக, இஸ்லாமிய மற்றும் கிருஸ்துவ மக்களுக்கு வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காகப் பேசாமல், அதிமுக எப்போதும் மனிதநேயத்தோடு உண்மையான உதவிகளைச் செய்து வருவதாகத் தெரிவித்தார்.