
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்ம் இணைந்து அதிமுக ஆட்சியை கவிழ்க்க சதி செய்து வருவதாக நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும், விரைவில் சட்டமன்றத்துக்கு தேர்தல் வரும் என ஸ்டாலினும், ஓபிஎஸ்ம் தொடர்ந்து ஒரே குரலில் பேசி வருவதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
அதிமுக என்னும் பட்டத்து யானையின் பயணத்தை தடுத்து நிறுத்த ஸ்டாலினும், ஓபிஎஸ்ம் திரை மறைவு வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஆனால் இவர்கள் இருவரின் கனவும் பலிக்காது என தெரிவித்த சம்பத், தொடர்ந்து 5 ஆண்டுகள் இந்த ஆட்சி தொடரும் என்றும், இதனைத் தொடர்ந்தும் ஜெயலலிதா ஆட்சியே தமிழகத்தில் நடைபெறும் என நாஞ்சில் சம்பத் திட்டவட்டமாக தெரிவித்தார்.