
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் திமுக மற்றும் விசிகவினர் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆ.ராசாவை கண்டித்து விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இரு தரப்பினருக்கும் காவல்துறை அனுமதி மறுத்திருந்தாலும், ஆதரவாளர்கள் திரண்டதால் சூழல் பதற்றமாக மாறியது. பின்னர் இரு தரப்பினரும் மாறி மாறி கற்கள் மற்றும் கட்டைகள் கொண்டு தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.