
பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில், ஆளும் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இந்நிலையில் சினிமா தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீசாரால் கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.