மூன்றாக பிரிகிறதா சென்னை? சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் முடிவு என்ன?

By Narendran SFirst Published Sep 28, 2022, 4:45 PM IST
Highlights

சென்னையை மத்தியப் பகுதி, வடக்கு, தெற்கு என்று மூன்றாகப் பிரிக்க சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) முடிவு செய்துள்ளது. 

சென்னையை மத்தியப் பகுதி, வடக்கு, தெற்கு என்று மூன்றாகப் பிரிக்க சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) முடிவு செய்துள்ளது. சென்னை பெருநகர மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஆய்வு கூட்டம் அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சென்னையை முந்தைய அதிமுக அரசு, 8,878 சதுர கிலோமீட்டராக உயர்த்தி, நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக மாற்ற திட்டமிட்டிருந்தது.

இதையும் படிங்க: சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை .. வானிலை மையம் அறிவிப்பு

இந்த நிலையில் தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, சென்னை பெருநகரப் பகுதியை மறுசீரமைக்கவும், நகரின் பெருநகரப் பகுதியை 5,904 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்தவும் முடிவு செய்துள்ளது. சென்னை பெருநகர வடக்குப் பகுதி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருத்தணி (பகுதியளவு), அரக்கோணம் (பகுதியளவு), திருவள்ளூர், பூந்தமல்லி (பகுதியளவு) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 8 தாலுகாக்களைக் கொண்டு 2,908 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும். அதுபோல சென்னை பெருநகர தெற்குப் பகுதி 1,809 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிவடையும். இது காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், குன்றத்தூர் (பகுதியளவு) மற்றும் வண்டலூர் (பகுதியளவு) தாலுகாக்களைக் கொண்டிருக்கும்.

இதையும் படிங்க: திமுக பொதுக்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு..! தலைவர், பொ.செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்

மேற்குறிப்பிட்ட இரண்டு பகுதிகளுக்கும் தனித்தனியாக மண்டல அலுவலகங்கள் இருக்கும். மேலும் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் திட்டமிடல் பிரிவுகள் சென்னை பெருநகர மத்தியப் பகுதியுடன் இணைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தற்போது 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சென்னை பெருநகரப் பகுதியை 5,904 சதுர கிலோமீட்டராக உயர்த்துவதுடன், அதனை சென்னை பெருநகர மத்தியப் பகுதி, சென்னைப் பெருநகரம் - வடக்கு மற்றும் சென்னைப் பெருநகரம் - தெற்கு என மூன்றாகப் பிரிக்க சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் தமிழக அரசிடம் முன்மொழிந்துள்ளது.

click me!