
சென்னையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை’ 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்வது குறித்த உயர்நிலைக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இத்திட்டத்தின் மூலம் பயன்பெறவுள்ள கூடுதல் மாணவர்களின் எண்ணிக்கை, நிதி ஒதுக்கீடு மற்றும் உணவு விநியோக தயாரிப்புகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கினார்.