
தமிழக முதல்வர் விஜய், சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு யாரும் எதிர்பாராத வகையில் திடீர் பயணம் மேற்கொண்டார். இந்த மருத்துவமனைக்கும் விஜய்க்கும் ஒரு முக்கிய தொடர்பு உண்டு; அவரும் அவருடைய தாயாரும் பிறந்தது இதே மருத்துவமனையில்தான். தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், விஜய்யின் இந்த திடீர் விசிட் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மருத்துவமனைக்கு வந்த முதல்வர், நேராக பிரசவ வார்டுக்குச் சென்றார். அங்கு புதிதாகக் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களையும், அவர்களது உறவினர்களையும் சந்தித்துப் பேசினார். அவர்களுடைய உடல்நலம் குறித்தும், மருத்துவமனையில் கிடைக்கும் வசதிகள் குறித்தும் அக்கறையுடன் கேட்டறிந்தார்.
தாய்மார்களிடம் பேசியதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள பச்சிளம் குழந்தைகளை கையில் ஏந்திக் கொஞ்சினார் விஜய். இந்தக் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, வேகமாகப் பரவி வருகின்றன. விஜய்யின் இந்தச் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது. இந்தப் புகைப்படங்கள்தான் தற்போது சோஷியல் மீடியாவின் ஹாட் டாபிக். விஜய்யின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் இந்தப் படங்களைப் பகிர்ந்து தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தாய்மார்களைச் சந்தித்த பிறகு, மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மருத்துவர்களுடன் விஜய் கலந்துரையாடினார். மருத்துவமனையின் தற்போதைய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரம் குறித்தும் அவர் கேட்டறிந்து ஆய்வு செய்தார். பொதுவாழ்வில் ஈடுபடத் தொடங்கியுள்ள நிலையில், அரசு மருத்துவமனையின் செயல்பாடுகளை நேரடியாகக் கள ஆய்வு செய்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது, மருத்துவமனை நிர்வாகத்திடம் தனது கருத்துக்களையும் அவர் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும்… pic.twitter.com/MyogHAz9Zx
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 8, 2026