சிங்கங்கள் மீண்டும் கர்ஜித்தன…! சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து சொன்ன சி.எம். ஸ்டாலின்

By manimegalai aFirst Published Oct 16, 2021, 8:29 AM IST
Highlights

ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை: ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2021 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ஆட்டத்தில் தமது வெற்றிக்கொடியை சிஎஸ்கே மீண்டும் நிலைநாட்டி உள்ளதால் ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர்.

இந் நிலையில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

சென்னை சூப்பர் கிங்ஸ் அற்புதமாக விளையாடி இருக்கிறது சிங்கங்கள் மீண்டும் கர்ஜித்துள்ளன. 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற ஒவ்வொரு சிஎஸ்கே வீரருக்கும், உலகம் எங்கும் உள்ள ஒவ்வொரு ரசிகருக்கும் வாழத்துகள்.

இந்த வெற்றியை கொண்டாட எம்எஸ் தோனியை சென்னை அன்புடன் காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

click me!