Abacus Competition: குழந்தைகள் தான் பெற்றோருக்கு மிக பெரிய வழிகாட்டி.. அபாகஸ் போட்டியை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன்!

Published : Jul 11, 2026, 04:44 PM IST
raj mohan

சுருக்கம்

Children: சென்னையில் இந்தியன் அபாகஸ் மையம் நடத்திய 7-வது தேசிய எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 2500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்த இந்த நிகழ்வில், அரசுப் பள்ளி மாணவர்களும் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

குழந்தைகள் தான் பெற்றோருக்கு மிக பெரிய வழிகாட்டிய இருக்க வேண்டும். முதலில் ஆசிரியராக பெற்றோர்கள் தான் இருக்க வேண்டும். அவர்கள் சரியாக வழி நடத்தினால் குழந்தைகள் சாதிக்க முடியும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்தியன் அபாகஸ் மையம் தேசிய அளவில் மனக்கணிதப் போட்டியை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டு 7-வது சர்வதே எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியை இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

இந்த ஆண்டு நடந்த தேசிய அபாகஸ் அடிப்படையிலான எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியில் இந்தியா முழுவதிலிருந்து சுமார் 2500 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த சர்வதேச போட்டியினை சிறப்பான முறையில் நடத்தும் வகையில் இந்தியன் அபாகஸ் அமைப்பு பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருந்தது.

போட்டியில் பங்கேற்க வரும் மாணவ, மாணவியர்களுக்கு சரியான வழிமுறைகளுடன் சிறப்பான தேர்வு எழுதி வெற்றி பெற சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். ஆசிரியர்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், இந்த போட்டியினை சிறப்பாக செய்வதற்கு ஏதுவாக பல பணிகளை மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாது, சென்னை அரசு பள்ளி மற்றும் மாநகராட்சி பள்ளி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியன் அபாகஸ் நிறுவனம் மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக கணித பாடப்பிரிவில் அவர்களின் அறிவு திறனை மேம்படுத்தும் விதமாக பயிற்சிகளை அளித்து வருகிறது.

அதன் விளைவாக இந்த தேசிய போட்டியில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களும் மற்றும் தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கேற்றார்கள். அது இந்த ஆண்டு நடத்தப்படும் அபாகஸ் அடிப்படையிலான எண்கணித / மனக்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியில் மேலும் ஒரு சிறப்பாகும். போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கம், பரிசு பொருள்கள் மற்றும் வெற்றி கோப்பைகளும் வழங்க வழங்கப்பட்டது. இதுபோன்று சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் அவர்கள் உயர்ந்த பதவிகளில் சாதனை படைக்க இந்த போட்டி மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இந்த சர்வதேச போட்டி குறித்து இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பஷீர் அகம்மது கூறுகையில்: எங்கள் நோக்கம் தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள எளிய மற்றும் அனைத்து மாணவர்களும் இந்த கணித பயிற்சியினை பயன்படுத்தி சாதனை மாணவர்களாக திகழ வேண்டும் அதுதான் எங்களது முதல் நோக்கம். அது மட்டுமல்லாது உலக அளவில் இந்திய மாணவர்கள் எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் சாதனை படைத்து திகழ வேண்டும் அந்த இலக்கை நோக்கி நாங்கள் தொடர்ந்து பயணித்து வருகிறோம். அதன் ஒரு வழி தான் இந்த சர்வதேச எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியை ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தி வருகிறோம் இதை மேலும் மேலும் நடத்த மாநில அரசு துணை நின்றால் நிச்சயமாக நாம், நமது இந்திய மாணவர்களை உலக அரங்கில் கல்வியில் சிறக்க செய்வோம். தற்போது கர்பினி பெண்களுக்கு சிறப்பான முறையில் எண் கணித பயிற்சி வழங்கி வருகிறோம். ஏராமமான கர்ப்பிணி பெண்கள் பங்கேற்று பயன்பெற்று வருகின்றனர் என்றார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள்: வீரவணக்கம் செலுத்திய வைகோ! நெகிழ்ச்சியான புகழஞ்சலி!
TNHRCE Job: 757 கோவில்களில் அறங்காவலர் பணி! அறநிலையத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?