சினிமாவை மிஞ்சும் வகையில் கார் - வேன் நேருக்கு நேர் மோதல்.. 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு..!

Published : Sep 09, 2023, 09:00 AM ISTUpdated : Sep 09, 2023, 09:01 AM IST
சினிமாவை மிஞ்சும் வகையில் கார் - வேன் நேருக்கு நேர் மோதல்.. 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு..!

சுருக்கம்

இந்த விபத்தில் புருஷோத்தமன், சக்திவேல், குருமூர்த்தி, வெங்கட் உள்ளிட்ட 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தத ரகுவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செங்கல்பட்டு அருகே  கார் - வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வழியாக மதுராந்தகம் நோக்கி 5 பேருடன் கார் வந்துக்கொண்டிருந்தது. அதே சாலையில் செய்யூரில் இருந்து உத்திரமேரூருக்கு தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேனும் வந்துக்கொண்டிருந்த போது ஓனம்பாக்கத்தில் எதிர்பாராத விதமாக காரும் வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில், கார் தலைகுப்புற சாலையில் கவிழ்ந்தது.

இதையும் படிங்க;- 6 முறை கருக்கலைப்பு செய்தது உண்மையா? நடிகை விஜயலட்சுமி அளித்த புகார்.. இன்று நேரில் ஆஜராக சீமானுக்கு சம்மன்..!

இந்த விபத்தில் புருஷோத்தமன், சக்திவேல், குருமூர்த்தி, வெங்கட் உள்ளிட்ட 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தத ரகுவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க;-  நெஞ்சு வலியோடு நடக்க முடியாமல் தட்டு தடுமாறி ஆஸ்பிடலுக்கு காரை ஓட்டி சென்ற மாரிமுத்து!கலங்க வைக்கும் காட்சிகள்

மேலும், உயிரிழந்த 4 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!